யாழ்.பரிசோதனைக் கூடத்தின் ஆய்வு கூடத்தில் இன்று நடைபெற்ற பிசிஆர் பரிசோதனையில் வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த எண்மருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள விபரம் வருமாறு,
இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 420பேருக்கு COVID-19 பரிசோதனை செய்யப்பட்டது. * வடமாகாணத்தில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
* மன்னார் மாவட்டத்தில் மூவர், வவுனியா மாவட்டத்தில் மூவர், கிளிநொச்சி மாவட்டத்தில் இருவர் என எண்மர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார். ...........
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம்